உடுமலை மின்பகிர்மான திட்டமேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் இல்லை என்று அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இது உடுமலை பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்த இடமாற்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், இந்த அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற முடிவு எதுவும் செய்யப்படவில்லை என உடுமலை மின்வாரிய அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வநாதன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...