உடுமலையில் வெண்டைக்காய் சாகுபடியில் அசத்தல் - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் வெண்டைக் காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நிறைந்த வருமானம் ,சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சல், மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால், தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஆண்டு முழுவதும் குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில், சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகும் பயிராக வெண்டைக்காய் அண்மைக்காலமாக இருந்துவருகிறது.



மேலும், சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளில் வெண்டைக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. சமீப காலமாக சர்க்கரை நோயாளிகள் இந்த வெண்டைக்காயை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது வெண்டைக்காயை தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் ஈட்டி அசத்திவருகின்றனர்.



வெண்டைக்காயை பொருத்தவரை வரத்து குறைவால் கிலோ ரூ. 40 முதல்50 ரூபாய் என விலை விற்பனையாகிறது. அதுமட்டுமின்றி, மொத்த வியாபாரிகள் இவற்றை வாங்கி, கோவை மதுரை சேலம் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதால் விற்பனை வாய்ப்பு அதிகரித்து, வருவாயும் கூடியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...