அண்ணா நினைவு தினம் - நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி உதகை நகர திமுக சார்பில் நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நீலகிரி: பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு எம்.பி ஆ.ராசாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், உதகை நகர திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து ஹில் பங்க் பகுதியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு உதகை நகர திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆ.ராசாவின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், நகர கழகத் துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வனிதா, மேரி பிளோரினா, பிரியா, கழக நிர்வாகிகள் மஞ்சு குமார், குழந்தைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...