அண்ணா நினைவு தினம் - நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி உதகை நகர திமுக சார்பில் நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நீலகிரி: பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு எம்.பி ஆ.ராசாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், உதகை நகர திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து ஹில் பங்க் பகுதியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு உதகை நகர திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆ.ராசாவின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், நகர கழகத் துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வனிதா, மேரி பிளோரினா, பிரியா, கழக நிர்வாகிகள் மஞ்சு குமார், குழந்தைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...