திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் பதவியேற்பு

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவருக்கு மேயர் தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பவன் குமார் ஜி.கிரியப்பனவர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார், கோவை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக, கடலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன் குமார் ஜி.கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஏற்கனவே, தாராபுரம் துணை ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...