தாராபுரத்தில் நெடுஞ்சாலைதுறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை.



திருப்பூர்: திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் கோட்டத் தலைவர் பீட்டர் தலைமை வகித்தார்.



ஆர்ப்பாட்டத்தின்போது சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் தற்போதைய பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு விரைந்து பணி வழங்கவேண்டும்.



சாலைப்பராமரிப்பில் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளராகப் பணி வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும் புதுப்பிக்கப்படும் நெடுஞ்சாலைகளைத் தனியார் ஐந்து வருடம் பராமரிக்கும் நடைமுறையை ரத்து செய்து சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...