கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு தைப்பூச தேர்த்திருவிழா நேறு காப்பு கட்டுடன் தொடங்கியது.

இதையடுத்து, நேற்று இரவு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை வள்ளி தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை வள்ளி தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.