ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இலக்கிய மற்றும் நுண்கலை மன்றத்தின் சார்பில் லிட்ரரி ஃபியஸ்டா என்ற ஆங்கில மொழி இலக்கிய விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் மூலம் திறன்சார்ந்த கற்றலின் தேவையே மையக்கருவாக கொண்டிருந்தது.

இவ்விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் எம்.ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா தலைமையுரை வழங்கினார். அப்போது அவர், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும், அது வேலைவாய்ப்புகளில் கொண்டுள்ள முக்கியப் பங்கையும் விளக்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரகுரு கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் கே.தேவதாஸ் பேசுகையில், அன்றாட வாழ்வில் அனைவருக்குமான ஆங்கிலம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் குறித்தும் உரையாற்றினார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கேளிச்சித்திரம் மற்றும் ஓவியப் போட்டிகள் இக்கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுககாக நடத்தப்பட்டது.

இவ்விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் எம்.ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா தலைமையுரை வழங்கினார். அப்போது அவர், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும், அது வேலைவாய்ப்புகளில் கொண்டுள்ள முக்கியப் பங்கையும் விளக்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரகுரு கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் கே.தேவதாஸ் பேசுகையில், அன்றாட வாழ்வில் அனைவருக்குமான ஆங்கிலம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் குறித்தும் உரையாற்றினார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கேளிச்சித்திரம் மற்றும் ஓவியப் போட்டிகள் இக்கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுககாக நடத்தப்பட்டது.