மேட்டுப்பாளையம் அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் சாலை ஏ.வி.பி.பள்ளி அருகே சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த தர்ஷன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மின்கம்பம் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன், இவரும் இவரது நண்பர் தர்சன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏ.வி.பி.பள்ளி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த தர்சன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...