மேட்டுப்பாளையம் அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் சாலை ஏ.வி.பி.பள்ளி அருகே சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த தர்ஷன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மின்கம்பம் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன், இவரும் இவரது நண்பர் தர்சன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏ.வி.பி.பள்ளி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த தர்சன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...