வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நீல வால் கருமந்தி

வால்பாறை அருகே சோலையாறு அணை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த நிலையில், வாகனங்கள் கவனமாக செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் அரிய வகையான சிங்கவால் குரங்கு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் பாதுகாத்து வருகின்றனர்.



இதனிடையே, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அனை அண்ணா நகர் பகுதியில் சாலையை கடக்க வந்த நீல வால் கருமந்தி, அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.



இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீலவால் கருமந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

இந்நிலையில், வால்பாறை வனப்பகுதி சாலையில் வாகனங்கள் வரும் பொழுது மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...