வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நீல வால் கருமந்தி

வால்பாறை அருகே சோலையாறு அணை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த நிலையில், வாகனங்கள் கவனமாக செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் அரிய வகையான சிங்கவால் குரங்கு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் பாதுகாத்து வருகின்றனர்.



இதனிடையே, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அனை அண்ணா நகர் பகுதியில் சாலையை கடக்க வந்த நீல வால் கருமந்தி, அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.



இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீலவால் கருமந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

இந்நிலையில், வால்பாறை வனப்பகுதி சாலையில் வாகனங்கள் வரும் பொழுது மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...