நீலகிரி கூடலூர் அருகே டிப்பர் லாரியில் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் - இருவர் கைது!

கூடலூர் கோழிப்பாலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் டிப்பர் லாரியில் கடத்திச் சென்ற ரூ.1.12 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கூடலூர் பகுதி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநிலங்களும் சந்திக்கும் இடமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஹான்ஸ் போன்ற குட்கா போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழக, கேரளா, கர்நாடக எல்லை சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் உத்தரவு படி கூடலூர் போலீசார் கோழிப்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் மம்பாடு பகுதியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



அப்போது அந்த லாரியிலிருந்து ஒரு லட்சத்தி 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலிசார் லாரியில் இருந்த அஸ்கர்(37) மற்றும் முஜீப் ரஹ்மான் (32) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...