லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ நூற்றுக்கணக்கான பெண்கள்‌ முளைப்பாரி யாத்திரை.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. கள்ளிப்பாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலவாக வந்து தேவியின் அருளை பெற்றனர்.

கோவை ஈஷாவில்‌ உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



நூற்றுக்கணக்கான பெண்‌ பத்தர்கள்‌ கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில்‌ ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம்‌ செய்தனர்‌.

இந்த யாத்திரையில்‌, உள்ளூர்‌ கிராம மக்கள்‌ மட்டுமின்றி, வெளியூர்‌ மற்றும்‌ வெளிநாட்டைச்‌ சேர்ந்த பக்தர்களும்‌ ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர்‌.



ஆண்கள்‌ கரகம்‌ ஏந்தி முன்‌ செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின்‌ உருவம்‌ வடிவமைக்கப்பட்ட தேர்‌ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில்‌ இருந்து காலை 6.30 மணி புறப்பட்ட இந்த யாத்திரை நண்பகல்‌ 12 மணியளவில்‌ லிங்கபைரவியை வந்தடைந்தது.



வரும்‌ வழியில்‌ ஆலாந்துறை, மத்வராயபுரம்‌, இருட்டுப்பள்ளம்‌, செம்மேடு என பல்வேறு இடங்களில்‌ அங்குள்ள கிராம மக்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்‌ கடந்த 21 நாட்கள்‌ சிவாங்கா விரதம்‌ மேற்கொண்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய்‌, தானியங்கள்‌, நெய்‌ தீபம்‌ உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...