கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரையை ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் அருகிலேயே கண்டு ரசித்து ஆதியோகியை நேரில் தரிசனம் செய்தனர்.
கோவை:கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தைத் தொடங்கின.
அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிப்ரவரி 1ஆம் தேதி கோபிக்கு வருகை தந்தது.

பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்ற இந்த ரதத்திற்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்யாத கிராமப்புற மக்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள் தங்கள் விட்டை தேடி ஆதியோகி வந்ததைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோபியிலிருந்து கொடிவேரி, அரசர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஈரோட்டு மாவட்டத்தில் இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்குப் பயணிக்கும்.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18ஆம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்க பைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தைத் தொடங்கின.
அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிப்ரவரி 1ஆம் தேதி கோபிக்கு வருகை தந்தது.
பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்ற இந்த ரதத்திற்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்யாத கிராமப்புற மக்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள் தங்கள் விட்டை தேடி ஆதியோகி வந்ததைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோபியிலிருந்து கொடிவேரி, அரசர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஈரோட்டு மாவட்டத்தில் இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்குப் பயணிக்கும்.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18ஆம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்க பைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.