கோவையில் போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மாநகர காவல் ஆணையர் சாகசம்

கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரோப் கட்டி 3வது மாடியில் இருந்து சரசரவென இறங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு சிறப்பு பணிக்குழு சார்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பணி குழு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.



இந்த பயிற்சியில் கோவை மாநகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.



இதில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது, மறைந்திருக்கின்ற குற்றவாளிகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இதைத்தொடர்ந்து நிறைவு நாளான இன்று டெமோ வகுப்பு நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினர்.



இந்நிலையில் கமிஷனர் பாலகிருஷ்ணன் மூன்றாவது மாடியில் இருந்து ரோப் மூலம் இறங்கி சாகத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...