கோவை துடியலூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை - ஒருவர் கைது

துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...