பல்லடம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளையொட்டி தேர் திருவிழா ஊர்வலம்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.



பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்தோடு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.



முருகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளோடு தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி உற்சவர் சிலை தேரில் பவனி நடைபெற்றது.



பக்தர்களின் அரோகரா முழக்கத்தோடு வானவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...