கோவை அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய வடமாநில வாலிபர் கைது!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாகக் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகளும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (33) என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கைதான மகேஷ்குமாரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வட மாநில நபர் மீது வழக்குப் பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...