கோவை அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய வடமாநில வாலிபர் கைது!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாகக் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகளும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (33) என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கைதான மகேஷ்குமாரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வட மாநில நபர் மீது வழக்குப் பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...