ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குசாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



ஈரோடு மாவட்டம் ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 238 வாக்கு சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ள 1206 அலுவலர்கள் இந்த முதல்கட்ட பயிற்சியில் பங்கேற்றனர்.



இதில் EVM இயந்திரம் கையாளுதல், வாக்கு சாவடிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 பேர் பணியில் ஈடுபடுவர், கூடுதல் வாக்காளர்கள் உள்ள 52 பூத்களில் மட்டும் கூடுதலாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இதே போல் மொத்தம் 4 கட்ட பயிற்சிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...