கோவையில் ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் அழிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிபொருட்கள் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் வெடிபொருள் உற்பத்தி நிறுவனத்தில் முறையாக அழிக்கப்பட்டது.



கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் முறையாக அழிக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடிபொருள்களை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சதி திட்டத்தை தீட்ட ஜமேசா முபின் உள்ளிட்டோர் முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து முதல் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிப்பொருட்கள், கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் வெடி பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி அழிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...