பல்லடத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



பேருந்து நடத்துனர் அறிவுறுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்காமல் பேருந்து படிக்கட்டுகளில் சாகசம் என நினைத்து உயிர் பயமின்றி தொங்கியபடி நாள்தோறும் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படும் முன்பு, மாணவர்களின் இந்த ஆபத்தான பேருந்துப் பயணத்தை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...