தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கு - சிசிடிவி காட்சி உதவியுடன் 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைசாலையில் ஸ்டேட் பேங்க் அருகிலும் மற்றொரு பகுதியான பெரிய கடைவீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக தாராபுரம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகார்களை பதிவு செய்த காவல்துறையினர், தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், கோவை மாவட்டம் செல்வபுரம், சொக்கநாத புதூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தனது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரன், வல்லரசு ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய 3 பேரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...