உடுமலையில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாணவ மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


திருப்பூர்: உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி அறக் கட்டளை கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்கில் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விருந்தினராக கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் பேசினார்.

அதில், இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிவதில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். தொலைபேசிகளை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாணவ-மாணவியர் பெற்றோர் மற்றும் சான்றோர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.



மன தைரியத்துடன் தன்னம்பிக்கையுடன் எந்த விஷயம் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆர்வத்துடன் செயல்பட வேண்டும், என்றார். இதில், ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் இயக்குனர் விஜயகுமாரி, திட்ட அலுவலர் ரத்தினவேல், உடுமலை ரோட்டரி தேஜஸ் சங்க தலைவர் சத்யம் பாபு, திட்ட இணைய அலுவலர்கள் எஸ்.எம்.நாகராஜ், முருகநாதன் மற்றும் உடுமலை ரோட்டரி சங்கத் தலைவர் ரகுநந்தன் ராஜு, ரோட்டரி கேலக்ஸி தலைவர் வழக்கறிஞர் பொன்ராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...