ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

நகராட்சி, மின்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் கோரி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.



இந்நிலையில் நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மின்துறை, நகராட்சி, டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சிஐடியு நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...