கோவையில் பழுது பார்க்க வந்த காரில் இருந்த அரிய வகை பறக்கும் பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டருக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்ட காரில் இருந்து அரிய வகை பாம்பான பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே பழுது பார்க்க வந்த காரில் இருந்து அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் சென்டருக்கு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் அந்த காரில் பழுது பார்க்க சென்ற போது அதில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பாம்புகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ரதீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பாகும்.

இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இதன் விஷத்தன்மை மனிதர்களை பாதிக்காது என்றும், பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும். உயரமான கிளையிலிருந்து கீழே குதிக்கும் திறமையும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமையும் கொண்டதன் காரணமாகவே இவ்வகை பாம்புகள் பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் ஆனைக்கட்டி வனப்பகுதி அருகே சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மரத்தில் இருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...