உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகள், மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருப்பூர்: கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகள், மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, கிளை செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.