கோவை மதுக்கரை அருகே வீட்டில் தீ - டிவி, நகைகள், ஆவணங்கள் எரிந்து நாசம்!

கோவை மதுக்கரை அருகே பாலத்துறையில் வீரக்குமார் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் டிவி, நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மதுக்கரை அருகே குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்ற நேரத்தில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, நகைகள், டிவி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (34). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றதாக தெரிகிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே சென்றபோது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் செல்போன் மூலம் அழைத்து வீட்டில் உள்ளே தீப்பிடித்து எரிவதாக தகவல் அளித்துள்ளார். மேலும் அவர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார்.



இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த டி.வி, உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 4.5 சவரன் தங்க நகை, பல்வேறு ஆவணங்கள் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பழனிக்கு செல்வதற்கு முன்னதாக வீட்டில் விளக்கு பற்றவைத்து சென்றதாக தெரிகிறது. எனவே விளக்கு மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...