பல்லடம் அருகே பள்ளி மாணவிகளை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் - அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே பேருந்தில் இருந்து 15 பள்ளி மாணவிகளை நடத்துநர் நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளை நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்டதை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சிக்குட்பட்ட புள்ளியப்பம்பாளையம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ - மாணவிகள் பல்லடம் அருகேயுள்ள பள்ளிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வாவிபாளையத்தில் இருந்து சித்தம்பலம் மற்றும் பல்லடம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயணித்துள்ளனர்.

இவ்வழியாக பள்ளிக்கு செல்ல காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி கூடுதலாக இல்லாததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பேருந்தில் பயணித்த 15 பள்ளி மாணவிகளை பேருந்து நடத்துநர் கேத்தனூரிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.



இந்நிலையில், 15 பள்ளி மாணவிகளும் கேத்தனூரில் இருந்து புள்ளியப்பம் பாளையத்திற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர். இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் பள்ளி மாணவிகள் முறையிட்டுள்ளனர்.



இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் இன்று காலை அரசு நகரப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி மாணவிகளை எப்படி பாதியிலேயே இறக்கிவிட்டு செல்லலாம் என பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏதுவாக பயணிக்க கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...