கோவை கே.ஜி.சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவி காட்சியின் மூலம் கொள்ளையனை பிடித்த போலீஸ்!

கோவை குட்டிகவுண்டன்பதி பகுதியில் விவசாயி ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணத்தை திருடிவிட்டு மற்றொரு வீட்டில் திருட முயன்ற இளைஞரை, சிசிடிவி காட்சி உதவியுடன் கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கே.ஜி.சாவடி அடுத்த குட்டிகவுண்டன்பதி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (53). விவசாயியான இவர், நேற்று தனது விவசாய நிலத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து விவசாயப் பணி மேற்கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தங்கவேல் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாளையார் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.



இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அபூபக்கர் (22) என்பதும், விவசாயி தங்கவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், மற்றொரு வீட்டில் திருடமுயன்றதும் தெரியவந்தது.

மேலும், அவர், தற்போது நவக்கரை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...