வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையின் இரு புறம் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வால்பாறை டவுன் பகுதியில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.



அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளன. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் உமா மகேஸ்வரி தலைமையில் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, புதுத்தோட்டம் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.



காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால், வால்பாறை பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...