பல்லடத்தில் பெட்ரோல் பங்க் அருகே பற்றி எரிந்த லாரி - பெரும் விபத்து தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெயகிருஷ்ணன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரமத்தி வேலூரில் இருந்து திருப்பூருக்கு லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளார்.

வாடகை ஏதும் இல்லாததால் பல்லடம் - உடுமலை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார். பொள்ளாச்சிக்கு இளநீர் ஏற்ற செல்வதற்கு தயாரான நிலையில், திடீரென லாரியின் பின்பக்கம் தீ பற்றி எரிய தொடங்கியது.



அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



மேலும், பெட்ரோல் பங்க் அருகிலேயே லாரி தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...