கோவை மதுக்கரையில் செல்போன் டவரில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி மற்றும் ஓயர்கள் என பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


கோவை: மதுக்கரை அருகே ஜியோ செல்போன் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி, ஒயர்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மதுக்கரை அடுத்த அறிவொளிநகர் பகுதியில் ஜியோ செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவருக்கு கிழ்பகுதியில் உள்ள பேட்டரி யூனிட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டவர் உள்ளே இருந்தஒயர்களில் தீ பரவி டவரின் மேல்பகுதியில் இருந்த ஒயரிலும் பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...