திருப்பூரில் மன அழுத்தத்தை குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அரசு மருத்துவமனை நோயாளிகள் பங்கேற்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், 'நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய மருந்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ‘நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை தலைவர் சரோஜா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். டாக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் அருள்ஜோதி, சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.



‘ஒண்டர்புல் நம்பிகை’மையம் சார்பில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோயாளிகளுக்கு, தங்களுக்கு இருக்கும் நோய் குறித்த பயத்தை எப்படி போக்குவது என்பது தொடர்பான அறிவுரைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.



இதில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவாக மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...