வால்பாறை அருகே தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சோகம்

வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது தேனீக்கள் தாக்கியதில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் மாரிமுத்து (45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த மாரிமுத்து உடல் நலக்குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு மாரிமுத்து கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை தாக்கியுள்ளது.



இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் கவுன்சிலர் அன்பரசன் செல்வம் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலையில் நடந்து சென்றவரை தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...