உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலியான சோகம்!

உடுமலை அடுத்த மானுப்பட்டி அருகே நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை - மூணார் செல்லும் பாதையில் மானுப்பட்டி அருகேயுள்ள கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காகவனப்பகுதியில்இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகலாக மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண் ஏற்று செல்லும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று அதிகாலையில் மானுப்பட்டி பகுதியில் இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தனிடையே மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மூலம் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

டிப்பர் லாரி ஓட்டுனராக உள்ள வட மாநிலத்தை சாா்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் மது போதையில் ஓட்டுவதாலும் வாகனங்களில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததாலும் விபத்து ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...