உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூசி படிந்து காணப்படுவதால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குதினமும் உடுமலைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் பழமையான வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கடந்த சில மாதங்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையக் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கூரை போதிய பராமரிப்பு இல்லாமல் தூசி படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.



பார்ப்பதற்கு மிகவும் பழமையான கட்டிடம் போல காட்சியளிக்கும் நிலையில், ஆதார் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மீதுமேற்கூரையில் இருந்துதூசுகள் அதிக அளவு விழுந்து வருகின்றன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...