ஹூண்டாய் கார் கம்பெனியுடன் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி உடன்பாடு

நாட்டில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹூண்டாய் தொழில் மேம்பாட்டு மையம்” ஒன்றை துவக்கியுள்ளது.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம், தரமான கல்வியுடன், கார், இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் கல்வி உபகரணங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஒய்.கே கூ இதுகுறித்து கூறுகையில், “எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து, ஒரு பொறுப்புள்ள நிறுவன குடிமகனாக திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டோமொபைல் சேவை ஆலோசகர்களை உருவாக்கும் இந்த மையம், மாணவர்களுக்கு நவீன வாகன தயாரிப்பு தொழில் நுட்பங்களை வழங்குவதோடு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்,” என்றார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகள், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்துக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். பாலிடெக்னிக் கல்லூரியில் திறமையானவர்களை உருவாக்குவதோடு, இந்திய வாகன சேவை தொழிலுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வின் கீ்ழ், திறன் மேம்பாட்டு பயிற்சியானது முதல்முறையாக 2012ம் ஆண்டு ஐடிஐ பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தது. தற்போது நாடு முழுவதும் 38 ஐடிஐ-க்களைக் கொண்டுள்ளது.

மாநிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஐடிஐ உடன், பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயின்றோரில் 95 சதவீதத்தினருக்கு ஹூண்டாய் டீலர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐக்களில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...