கோவை கவுண்டம்பாளையத்தில் குட்கா விற்பனை - மளிகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதை பொருட்களை விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளர்கள் தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை சிலர் மளிகைக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் தலைமையிலான குழு, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குட்கா, பான்மசாலா போதை பொருட்களை அங்குள்ள தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் மளிகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...