கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டுவரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில், குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் குறித்து சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.
இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.

குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.
மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.
குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.
மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.