கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஃபெர்டிலிட்டி மருத்துவர் தகவல்


கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-



"விளக்கமுடியாத மகப்பேறின்மை" என்பது காரணம் கண்டறியப்பட முடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைப் பெறின்மை ஆகும்.

90 சதவிகித தம்பதியரில் கருத்தரிக்காததற்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் ஆணிடமோ, பெண்ணிடமோ குறைபாடுகள் உள்ளதை அறியலாம். சில சமயம் ஆண், பெண் என இருவரிடமும் குறைகள் இருப்பதைக் கண்டறியலாம்.

பொதுவாக குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் தம்பதியருக்கு கருக்குழாய் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் காரணம் அறியாத நிலையில் அவர்கள் விளக்கமுடியாத மகப்பேறின்மையில் அடக்கப்படுகிறார்கள்.

கோவையில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் இத்தகைய விளக்க முடியாத குழந்தையின்மை இருப்பது தெரிகிறது. இத்தகைய விளக்க முடியாத மகப்பேறின்மையில் கருமுட்டை, விந்தணு போன்ற அடிப்படை நிலையில் குறைபாடுகள் இருப்பதார் சாதாரண பரிசோதனைகளில் கண்டறியப்பட முடிவதில்லை.

சாதாரணமாகத் தெரியும் விந்தணு, கருமுட்டை கூட கருவாகும் தன்மை அற்றுப் போகலாம். மைக்ரோஸ்கோப்பியில் நன்றாகத் தோன்றும் கரு, கருப்பையில் பொருந்தாமல் போகலாம். இவை சாதாரண பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கருமுட்டை தரம் குறைபாடு, விந்தணு செயல்திறன் குறை, கருப்பை இருந்தும் ஒட்டாமல் இருக்கும் தருணம்போல கண்டறிய முடியாத மகப்பேறின்மைக்கு IVF தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழியாகும்.

விளக்கமுடியாத மகப்பேறின்மை கொண்டோர் பல பரிசோதனைகள் மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி விரக்தியில் இருக்கும நிலையில் IVF சிகிச்சை முறையில் கருவுற்றவுடன் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...