கோவை அருகே ஷேர் ஆட்டோ மீது காய்கறி ஏற்றிவந்த வாகனம் மோதி விபத்து - தம்பதி படுகாயம்!

கோவை வடவள்ளி அருகே சாலையில் சென்ற பயணிகள் ஆட்டோ மீது காய்கறி லோடு ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.


கோவை பவானி வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி சந்திரா. பொன்னுசாமி பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், பொன்னுச்சாமியும், மனைவி சந்திராவும் வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்றதாக தெரிகிறது.



அப்போது, எதிரே அதிவேகமாக காய்கறி லோடு ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம், பொன்னுசாமி வந்த ஆட்டோ மீது மோதியது.



இதில், ஆட்டோ நிலைக்குலைந்தது தூக்கி வீசப்பட்டதில் பொன்னுச்சாமி , சந்திரா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கவுன்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...