குன்னூரில் வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்ற வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



நீலகிரி: டெல்லியிலிருந்து திரும்பிய வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழமை மிக்கது. இந்த ராணுவ மையம் நாட்டிலே மிகவும் முக்கியமான ராணுவ மையமாகத் திகழ்ந்து வருகிறது. முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு ராணுவ பிரிகளின் சார்பாக பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடைபெற்றது.



இதில் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரஜி மெண்டல் சென்டர் பேண்ட் வாத்திய கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாம் இடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.



இசைக் குழுவினர் இன்று டெல்லியிலிருந்து குன்னூர் திரும்பினர்.



அப்போது ராணுவ முகாம் நுழைவு வாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



மேலும் ராணுவ வாகனத்தில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலிருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் இசைக்க வெற்றிக் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...