பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ள கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.
கோவை: உக்கடம்-ஆத்துப் பாலம் இடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
இந்த மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், பொள்ளாச்சி, மற்றும் பாலக்காடு, கேரளமாக பயணிப்பவர்களுக்கும், கோயமுத்தூர் தெற்கு மார்க்கமாக இருந்து கோவை மாநகரம் நோக்கி பயணிப்பவர்களுக்கு இலகுவான பயணம் அமையும்.

இந்நிலையில் முதல் கட்டமாக, உக்கடம் - ஆத்துப்பால மேம்பால கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளன. உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையிலே ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உக்கடம் -ஆத்துப் பாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 70-80% நிறைவடைந்துள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இரண்டு இடங்களில் ஏறுதளமும், இரண்டு இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
இந்த மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், பொள்ளாச்சி, மற்றும் பாலக்காடு, கேரளமாக பயணிப்பவர்களுக்கும், கோயமுத்தூர் தெற்கு மார்க்கமாக இருந்து கோவை மாநகரம் நோக்கி பயணிப்பவர்களுக்கு இலகுவான பயணம் அமையும்.
இந்நிலையில் முதல் கட்டமாக, உக்கடம் - ஆத்துப்பால மேம்பால கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளன. உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையிலே ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உக்கடம் -ஆத்துப் பாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 70-80% நிறைவடைந்துள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இரண்டு இடங்களில் ஏறுதளமும், இரண்டு இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.