கோவை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 24X7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



காமராஜபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,



அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, குழந்தைகளுடன் கலந்துரையாடிய பின்பு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், பொன்னையா நகர் பகுதியில் SRP திட்டத்தின்கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் 607 மீட்டர் அப்பகுதியிலுள்ள தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் உள்ள தார் சாலையினையும், குப்பைகளையும் அகற்றி உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.64-க்குட்பட்ட புளியகுளம், ஜெயநாதன் வீதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் (TURIP 2022-2023) பேஸ்-1கீழ் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவசாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.66-க்குட்பட்ட பந்தைய சாலை, டீ-எஸ்டேட் மற்றும் ஏ.டி.டி. சாலை சாலை பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து, அப்பகுதிகளில் உடனடியாக தார்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், பார்த்திபன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...