கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பள்ளிகளில்‌ மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 10, 11, 12-ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 28 அரசுப் பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 10, 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மார்ச்‌, ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ளது.

அரசு பொதுத்‌ தோ்வுகளை எதிர்கொள்ளத் தயார்‌ செய்யும்‌ பொருட்டு மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 5,608 மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதாரவேல்‌, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ ஜி.மரிய செல்வம்‌, உதவி ஆணையர்‌ மோகனசுந்தரி, மற்றும்‌ பள்ளி ஆசிரியாகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள்‌ மாநில அளவில்‌ நடைபெற்ற பள்ளி கலைத் திருவிழாவில்‌ கலந்து கொண்டு பிறவகை குழு நடனத்தில்‌ பங்கேற்று முதலிடம்‌ பிடித்து வெற்றி பெற்றமைக்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...