கோவை தொழிலதிபரிடம் அத்துமீறி பணம் பறிப்பு - 2 திருநங்கைகள் கைது

கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற அவர், இரவு 11 மணியளவில் தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது, அருகாமையில் வந்தஇரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பிரதாப் சந்திரனை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும், பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் திருநங்கைகள் பறித்து சென்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதாப் சந்திரன், இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வனிஷா, ரம்யா என்ற இரண்டு திருநங்கைகளை விசாரித்தனர்.அதில், பிரதாப் சந்திரன் குற்றம்சாட்டியது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...