கோவையில் இரு சக்கர வாகனம் திருட்டு - சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை சின்னாறு அணைக்கட்டு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வேடப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது23). இவர் நேற்று தனது நண்பர்களான கருணாகரன், கௌதம், சஞ்சய் குமார் ஆகியோருடன் இரண்டு வாகனங்களில் ஈஷா நோக்கி சென்றனர்.

முன்னதாக, சின்னாறு அணைக்கட்டை பார்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜீவசமாதி அருகே வண்டியை நிறுத்திவிட்டு அணைக்கட்டை பார்த்துவிட்டு மீண்டும், வந்து பார்த்தபோது குருபிரசாத் வந்த இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அக்கம் பக்கத்தில் கேட்டபோது மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றதாக தெரிவித்தனர். இதை அடுத்து நண்பர்களுடன் நரசிபுரம் சாலையில் சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை மூன்று நபர்கள் தள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதைப்பார்த்த குருபிரசாத் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.



பின்னர், பிடிபட்ட மூன்று பேரையும் ஆலாந்துறை போலீசில் குருபிரசாத் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பூளுவபட்டியை சேர்ந்த ரஜீவன் (வயது21), மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...