வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி - வனத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு!

வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால், வனப்பகுதியில் காட்டுத் தீக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், கொண்டை ஊசி வளைவுடன் சாலையின் விளிம்புகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள காய்ந்த இலைகள் மற்றும் புதர்கள் காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகளை வீசுவதையோ அல்லது உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் தீ மூட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.



மேலும், வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம் சுப்பிரமணி IFS மற்றும் துணை இயக்குனர் பார்கவதேஜா IFS, அறிவுரைப்படி வால்பாறை சரகம் வனச்சரக அலுவலர் வெங்கேட்ஷ் தலைமையில் காடு மற்றும் சாலை இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.



தற்பொழுது வரை சுமார் 50 கிலோமீட்டர் காடம்பாரை முதல் மாவடப்பு, அக்காமலை பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...