வால்பாறையில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடமாட வேண்டுமென பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதியிலிருந்து இங்கு நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கொன்று தூக்கிச்செல்வது தொடர்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை காமராஜர் நகர் சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர்.



சாலையைக் கடக்கும் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்வதுபோல் பதிவாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையடுத்து, புதுத்தோட்ட பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...