உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் - தென்னை விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

பேச்சுவார்த்தையில், கூலி விவகாரத்தில் பழைய நிலை தொடர்வது, உள்ளூர் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

உடுமலை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் வடமாநில தொழிலாளர் வருகை, கூலி சம்பந்தமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது.



அதன் தொடர்ச்சியாக சில சச்சரவுகள் தொடர்ந்த நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணஉடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதில் வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், தளி காவல்நிலைய ஆய்வாளர் ராஜாகண்ணன் முன்னிலையில் இந்த அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், S.பரமசிவம், சிங்காரம் உள்ளிட்டோரும், வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்குமார், அருண், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் ஜெகதீஷ், ரங்கநாதன், தர்மன், ஜெயக்குமார், மகுடீஸ்வரன் தென்னை பேரவை சார்பில் சக்தி, தர்மர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பல்வேறு சுமூக முடிவுகள் எட்டப்பட்டன. அவை,

1) கடந்த நாட்களில் கூலி விவகாரத்தில் என்ன நிலை இருந்ததோ அதனை அப்படியே தொடர்வது... தேங்காய் விலை சீரமைந்த பின் கூலி இறுதி செய்வது குறித்து பேசிக்கொள்வது.

2) சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாத வண்ணம் அனைவரும் நடந்து கொள்வது.

3) வியாபாரிகள்உள்ளூர் தொழிலாளிகளை தங்கள் வேலைக்கு கூடுதலாக பயன்படுத்திக்கொள்வது.

4) சமூக ஊடகங்கள் மூலமாக தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் வதந்திகளை பரப்பக்கூடாது.

இவ்வாறான மேற்கண்ட முடிவுகளை அனைவரும் அமுல்படுத்துவது என தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தையில் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...