தாராபுரம் அருகே கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை - பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான கடைகளில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசு அனுமதி இல்லாத நிறுவனங்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் வெளியில் தயாரிக்கப்படும் முருக்கு, மிக்சர், பிஸ்கெட்டுகள், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் பொருளை தயாரிக்கும் போது அதன் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த பாக்கெட்டில் உள்ள லெபிளில் எதுவும் குறிப்பிடுவதில்லை.

இது குறித்து நகராட்சி, சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் எவரும் மாதக்கணக்கில் ஆய்வு செய்ய வராமல் உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தனியார் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் போது ஒரு விதமான வாடை வருவதுடன், அவற்றின் சுவை தன்மை மாறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உடல் உபாதைளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவு பொருள் கட்டுப்பாட்டு துறையினர் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...