கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள சிட்ரா அருகிலுள்ள புனித செபாஸ்டின் ஆலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பள்ளியில் இருந்து கையாடல் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்பாஸ்கோ என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 21 லட்சம் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
ஜான்பாஸ்கோ, 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 668 கையாடல் செய்ததாகவும், மேலும் வரவு செலவு கணக்குகளை மறை மாவட்டத்திற்கு அறிவிக்காமல் சொத்து சேர்த்ததாகவும் ஜெரால்ட் பூபாலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 2010ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை புனித செபாஸ்டின் ஆலையத்திற்கு வழங்கவும் நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.